search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரசுடன் இணையும் கட்சிகள்"

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. #MonsoonSession #NoConfidenceMotion #ModiGovt
    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 18 நாட்கள் கூட்டம் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் ‘முத்தலாக்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் கொண்டு உள்ளது. மேலும் புதிதாக 18 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



    ஆனால்,  ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் வரிந்து கட்ட ஆயத்தமாகி வருவதால் கூட்டம் அமைதியாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மத்திய அரசுக்கு எதிராக இந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார்.



    இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாமல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.  மேலும் சில கட்சிகளை சந்தித்து இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    அநேகமாக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீசை நாளை சபாநாயகரிடம் அளிக்கலாம் என தெரிகிறது. எனவே, இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #MonsoonSession #NoConfidenceMotion #ModiGovt

    ×